
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
சென்னை சூளைமேட்டில் பஜனை கோயில் முதல் தெருவில் வசித்து வரும் சுகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர். இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சுகுமார் மீது மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 10 மணி முதல் சுகுமார் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐந்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையை அடுத்து பஜனை கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

முழு விபரம்: சுகுமார் நடத்தி வரும் நிறுவனம் சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடல் அகழ்வாராய்ச்சி, துறைமுகங்களில் கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வருகிறது. துறைமுகத்தில் நடந்த கட்டுமானப்பணிகளின் போது முறைகேடுகள் நடந்ததாக துறைமுகம் அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சுகுமார் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பண மோசடி தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்.
Beşiktaş su kaçak tespiti İstanbul’da su kaçağı tespiti yapmak isteyen herkese tavsiye ediyorum. Hizmet çok profesyoneldi. https://www.highpriceddatinguk.com/read-blog/13072