
தைலாபுரம் தோட்டத்து வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற பணத்தை எல்லாம் திரும்ப ஒப்படைத்துவிட்டால் அன்புமணியிடமே எல்லா அதிகாரத்தையும் கொடுத்துவிடுவார் ராமதாஸ் என்கிறார் ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் நீண்டகாலம் பயணித்த சி.என்.ராமமூர்த்தி.
அன்புமணி தன் அம்மா சரஸ்வதியை தண்ணீர் பாட்டிலால் அடித்தார் என்று ராமதாசே பலமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்லி வருந்தியிருக்கிறார். ஆனால் ராமதாசையே அடித்து கீழே தள்ளிவிட்டார், அறைக்குள் மூன்று நாட்கள் அடைத்து வைத்திருந்தார் அன்புமணி என அதிரவைக்கிறார் ராமமூர்த்தி.

வன்னியர் அமைப்புகளில் பொதுச்செயலாளர், நிறுவனத்தலைவராக இருந்து அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சியின் தலைவராக இயங்கி வரும் சி.என்.ராமமூர்த்தி தைலாபுரத்தில் நடக்கும் தந்தை – மகன் மோதல் குறித்து யூடியூப் சேனல்கள் மூலம் தொடர்ந்து அதிர்ச்சி தரும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தற்போது அவர் அளித்திருக்கும் நேர்காணல் மூலம், தைலாபுரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்தும், தந்தை – மகன் மோதல் முடிவுக்கு வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்து சொல்லி அதிரவைக்கிறார்.
’’40,30 வருசமா வீட்டுல இருந்தவங்க எல்லாரையும் அடிச்சு விரட்டிட்டார் அன்புமணி. மூணு பேருதான் இப்ப அந்த வீட்டுல இருக்காங்க. திண்டிவனத்துல இருந்து ராமதாஸ் பொண்ணுதான் சாப்பாடு சமைச்சு வந்து அப்பா, அம்மாவுக்கு கொடுக்குது.

வீட்டுல உள்ளவங்கள எல்லாம் அடிச்சு துரத்திட்டு, வேலைக்காரங்களை எல்லாம் வெளியே துரத்தியடிச்சுட்டு, எலவு விழுந்த வீடு மாதிரி அப்பன புடிச்சு அடிச்சு உதைச்சு தள்ளிட்டு, அம்மாவ பாட்டிலால அடிச்சு, அங்கிருக்கிற எல்லா பணத்தையும் எடுத்திட்டு போயிட்டார் அன்புமணி.
இதனால ராமதாசால இனிமே செயல்பட முடியாதுன்னு நினைக்கிறார் அன்புமணி. ஆனா, வெளியே அங்கே இங்கே கொடுத்து வச்சிருக்கிற பணத்தை வச்சு ராமதாஸ் செயல்படுறார்.
அதிமுக கூட்டணி ஒப்பந்தத்தின் போது ராமதாஸ் சொன்ன சிலவற்றை ஏற்காத அன்புமணி, அவரை அடிச்சு மூணு நாள் ரூமுக்குள் அடைச்சு வச்சு, நேர நேரத்துக்கு சாப்பாட்டை மட்டும் அந்த ரூமுக்குள் போட்டுட்டார். அந்த ஆத்திரம் எல்லாம் இருக்குது ராமதாசுக்கு.

ராமதாசை அடித்து கீழே தள்ளிவிட்டு, எடுத்துட்டு போன பணத்தை எல்லாம் அன்புமணி கொடுத்திட்டா ராமதாஸ் சமாதானம் அடைஞ்சிடுவாரு’’ என்கிறார். சி.என்.ராமமூர்த்தி.
பாஜகவுடன் கூட்டணி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணியும், சவுமியாவும் தன் கால்களை பிடித்துக்கொண்டு அழுததாக ராமதாஸ் சொல்லி இருக்கும் நிலையில், ராமதாசையே மூன்று நாட்கள் அன்புமணி அறைக்குள் அடைத்து வைத்ததாகச் சொல்லி புதுப்புயலை கிளப்புகிறார் சி.என்.ஆர்.