
1987க்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்ததால் தக் லைப் படத்தை நாயகன் -2 என்றே நினைத்தனர் ரசிகர்கள்.
தக் லைப் படத்தின் போஸ்டர்களும் கேங்ஸ்டர் படம் என்பது போல் இருந்ததால் நாயகன் படத்தின் இரண்டாம் பாகம்தான் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால், படம் திரைக்கு வந்ததும் அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமையவில்லை தக் லைப் படம். இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள். இதனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
ஒரு மெகா கூட்டணி அமைந்தும் மெகா ஹிட் இல்லையே என்ற கடுப்பில் ரசிகர்கள் தக் லைப் குழுவினரை போட்டு நய்ய புடைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களிட மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக தகவல் பரவி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக இந்த தகவல் பரவி வருகிறது.

’’நானும் கமல்ஹாசனும் இணைந்து நாயகன் போன்ற படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. வேறுபட்ட ஒரு படமாக எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு நேர்மாறாக ரசிகர்கள் வேறொரு எதிர்ப்பார்ப்பில் இருந்துள்ளனர். இதனால் நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று மணிரத்னம் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது மணிரத்னத்தின் பெருந்தன்மை என்றும், அவர் ஒன்றும் மன்னிப்பு கேட்கவில்லை. நான் சரியாகத்தான் எடுத்தேன். நீ வேறோரு எதிர்பார்ப்பில் வந்துவிட்டாய் என்று ரசிகர்கள் மேல்தான் குற்றச்சாட்டை சுமத்துகிறார் என்றும் விவாதித்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வரும் செய்திகளை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மறுத்திருக்கிறது. தக் லைப் பட விவகாரத்தில் மணிரத்னம் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், மன்னிப்பு கேட்டதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.