டப்லினில் நேற்று நடைபெற்ற 2026 FIFA கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது, அயர்லாந்து வீரர் டாரா ஓஷியாவை முழங்கையால் தள்ளி ஃபவுல் செய்ததற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ( Cristiano Ronaldo ) ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. தனது 22 வருட கால்பந்து வாழ்க்கையில், ரொனால்டோவிற்கு முதல்முறையாக இந்த ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.இது வன்முறை என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ரொனால்டோவிற்கு 3 போட்டிகள் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அர்மேனியாவிற்கு எதிரான போட்டியிலும், உலகக் கோப்பையில் முதல் 2 போட்டிகளிலும் ரொனால்டோ தடை செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
