இந்தியா “ஒற்றுமையில் பல்வகைமை” என்ற பெருமைமிக்க அடையாளத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் அந்த அடையாளம் அடிக்கடி சவால்களை சந்தித்து வருவதை உத்தரகாண்டில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. இன அடிப்படையிலான அவமதிப்பு, உருவகேலி மற்றும் வன்முறை எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான சாட்சியாக, ஒரு இளம் (MBA) மாணவனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
சீனர் என உருவகேலி
திரிபுராவை சேர்ந்த அஞ்சேல் சக்மா (Anjel Chakma) என்ற மாணவர் உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன்னில் தங்கி உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், மாணவன் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல இருந்ததால், அவர் சில பொருட்கள் வாங்குவதற்காக தனது இளைய சகோதரருடன் வெளியே சென்றுள்ளார். அப்பொழுது, சில உள்ளூர் இளைஞர்கள் அவர்களை நோக்கி சீனர்கள் என்று இனம் சார்ந்த உருவகேலி செய்துள்ளனர். இதற்கு எதிராக அந்த மாணவன் “நாங்கள் இந்தியர்களே, எங்களை இவ்வாறு அவமதிக்காதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாணவர் மீது கொடூர தாக்குதல்
இதனையடுத்து, ஆரம்பத்தில் வாய்த்தகராறாக இருந்தது, சில நிமிடங்களிலேயே கொடூரமான தாக்குதலாக மாறியுள்ளது. தொடர்ந்து, குழுவாக வந்த அந்த இளைஞர்கள், மாணவனை கையாலும் காலாலும் தாக்கி, அருகிலிருந்த கடினப் பொருட்களையும் பயன்படுத்தியதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சாலையின் ஓரத்தில், பொதுமக்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது சமூகத்தை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனையடுத்து மாணவர் அஞ்சேல் சக்மா பலத்த காயங்களுடன் மாணவன் மயங்கி விழுந்தார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இதனைத்தொடர்ந்து, தாக்குதலுக்குப் பிறகு மாணவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும், சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அனைத்து மருத்துவ முயற்சிகளும் பலனளிக்காமல், அந்த இளம் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவனின் மரணம் – சமூக அதிர்ச்சி
இந்த மரணம், ஒரு தனிப்பட்ட குற்றச்செயலாக மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான மனநிலை, இனவெறி மற்றும் அறியாமை ஆகியவற்றின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு உயர்கல்வி மாணவன், தனது எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வந்த நிலையில், அவமதிப்புக்கும் வன்முறைக்கும் பலியாகி உயிரிழந்தது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறை நடவடிக்கை
சம்பவம் தொடர்பாக:
- பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- முக்கிய குற்றவாளிகள் மீது கொலை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- சம்பவத்தின் பின்னணி மற்றும் திட்டமிடல் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
மேலும், காவல் துறை இது சாதாரண தகராறு அல்ல என்றும் இன அவமதிப்பால் தூண்டப்பட்ட வன்முறை என விசாரணை செய்து வருகிறது.
அரசியல் மற்றும் சமூக எதிர்வினைகள்
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்
- அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் “இது இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம்” எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்
- உத்தரகாண்ட் (uttarakhand) அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது
