இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வருவது வதந்தி என்று அவரது குடும்பத்தினரும் மருத்துவமனை நிர்வாகமும் உறுதி அளித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகன் மனோஜ் பாரதியின் திடீர் மறைவு, 80 வயதைக் கடந்த பாரதிராஜாவுக்கு மனதளவிலும் உடல் அளவிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது. முதுமை மற்றும் மகன் மனோஜ் மரணத்தாலும் உடல் மற்றும் மனம் நலிவடைந்து போயிருக்கும் பாரதிராஜாவுக்கு நினைவுகள் தப்பியிருக்கிறது என்று பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் வருத்தப்பட்டிருந்தார். இதனால் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்தார்.

சென்னை திரும்பிய பின்னர் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பின்னர் மூச்சுத்திணறல் , சுவாசப்பிரச்சனைகளால் கடந்த 27ம் தேதி அன்று உடல்நிலை மோசமானதால் அமைந்தகரை நெல்சன்மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நண்பர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீவிர சிகிச்சையில் உள்ள அவரின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது வதந்தி என்றும், தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகமும் பாரதிராஜாவின் குடும்பத்தினரும் உறுதி அளித்துள்ளனர். மேலும், சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவா. வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
