
கள்ளக்காதலியுடன் உறவு கொண்ட இளைஞர், காதலியின் இரண்டரை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் மூச்சுத்திணறி அந்தப் பிஞ்சு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. வலிப்பு வந்ததாக அரசு மருத்துவமனையில் நாடகமாடிய அந்த கொடூரத்தாயின் நாடகம் மருத்துவப் பரிசோதனையில் அம்பலமாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மால்வானி பகுதியைச் சேர்ந்தவர் ரீனாஷேக். 30 வயதான இந்தப்பெண் கணவரை பிரிந்து தனது இரண்டறை வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 19 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று முன் தினம் ரீனாஷேக்கும் பர்கான்ஷேக்கும் உல்லாசமாக இருந்துள்ளனர். ரீனாஷேக்குடன் உறவு கொண்ட பர்கான் ஷேக், ரீனாவின் இரண்டறை வயது பிஞ்சு மகளிடமும் பாலியல் சேட்டைகள் செய்திருக்கிறார். இதை ரீனா கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார். குழந்தை என்றுகூட பாராமல் அந்த பிஞ்சுவை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் பர்கான். இதில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்திருக்கிறது.
இத்தனை கொடூரத்தையும் அந்த தாய் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
குழந்தை இறந்ததும் என்ன செய்வது என்று அறியாமல் ரீனாவும், பர்கானாவும் விழித்துள்ளனர். வலிப்பு வந்து மயங்கிவிட்டது என்று சொல்லி குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்து விடலாம். டாக்டர்கள் பரிசோத்து பார்த்துவிட்டு குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டது என்று சொல்லி விடுவார்கள். டாக்டர்கள் சொன்னதையே வலிப்பு வந்து குழந்தை இறந்து விட்டதாகச் சொல்லி விடலாம் என்று திட்டமிட்டு அதன்படியே செய்திருக்கிறார் ரீனாஷேக்.

ஜன்கல்யாண் நகர் அரசு மருத்துவமனையில் தன் குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார் ரீனா ஷேக். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்தனர். அக்குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. ஏன் அக்குழந்தை உயிரிழந்தது என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அக்குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும் நடந்த பரிசோதனையில் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், அதில் மூச்சுத்திணறி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் மருத்துவர்கள். போலீசார் மருத்துவ அறிக்கையை பார்த்த பின்னர் ரீனா ஷேக்கை அழைத்து துருவித்துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் ரீனேஷேக் மற்றும் பர்கான் ஷேக் இருவர் மீதும் 70,64,65(2), 66,103,238, 3(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
பெற்ற தாயே தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் மால்வானி பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.