
பாடகி கெனிஷாவுடனான காதலால்தான் ரவிமோகன் தன் மனைவி ஆர்த்தியைப் பிரிந்துவிட்டார் என்று செய்திகள் கசிந்த நிலையில் அதை ஆர்த்தியே உறுதி செய்தார்.
ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ரவி நீதிமன்றத்திற்குச் செல்ல விவகாரம் வெளியே தெரியவந்தது. கெனிஷாதான் மனைவியை பிரிவதற்கு காரணமா? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பிய போதெல்லாம், ’இல்லை’ என்று மறுத்த ரவி, திடீரென்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமணத்திற்கு திருமண கோலத்தில் கைகோர்த்துக் கொண்டு ஒரே காரில் கெனிஷாவுடன் வந்திறங்கி மீண்டும் கை கோர்த்தபடியே ரவி மோகன் சென்றது ஆர்த்தியின் குற்றச்சாட்டினை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து ஆர்த்தியும் ரவியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டனர். குறுக்கே புகுந்து கெனிஷாவும் ஆர்த்தியை மறைமுகமாக தாக்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து நீதிமன்றமே இருவரும் இனிமேல் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சுமத்தி அறிக்கை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

ரவி -ஆர்த்தி பிரிவுக்கு கெனிஷாதான் காரணம் என்று அவரை சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். சில ஆபாசமாக பேசுவதாகவும், பாலியல் ரீதியாக பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார் கெனிஷா.
இந்த தாக்குதல் இப்போது எல்லை மீறிப்போவதாகவும், போன் காலிலும் வந்து மிரட்டல் விடுப்பதாகவும் கதறம் அளவுக்கு போயிருக்கிறார் கெனிஷா. அதனால் ரவி -ஆர்த்தி பிரிவுக்கு தான் காரணம் இல்லை என்று, தான் காரணம் என்று அவதூறு பரப்பக்கூடாது என்றும் வழக்கறிஞர்கள் மூலமாக எச்சரித்திருக்கிறார் கெனிஷா. அதுமட்டுமல்லாமல் இதுவரை தன் மீது அவதூறு பரப்பி பதிவிட்ட அத்தனை பதிவுகளையும் 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் மூலமாக எச்சரித்திருக்கிறார்.
ஆனாலும் கெனிஷா மீதான தாக்குதல்கள் வலுத்த வண்ணம் இருப்பதாகவே சொல்கிறது கெனிஷா தரப்பு.
59xz27