
’’2025ல உலகம் ஜோலி முடிஞ்சிச்சு’’ பாம்பு போல 20 அடிக்கு மேல் இருக்கும் மீனை 7 மீனவர்கள் தூக்கி வைத்துக்கொண்டு எச்சரிக்கின்றனர்.
ஆழ்கடலில் வாழும் ஓர் ஃபிஷ்(oarfish) என்பதை டூம்ஸ்டே மீன், துடுப்பு மீன், ‘பூகம்ப மீன்’ என்று ஜப்பானியர்கள் அழைக்கின்றனர். இம்மீன் கரைக்கு வந்தால் அது பூகம்பம் போன்ற பேரழிவின் அறிவிப்பு என்று நம்புகின்றனர் ஜப்பானியர்கள்.
ஆழ்கடலில் வாழும் இந்த மீன் வெளியே வந்தால் அது உலகின் அறிகுறி என்கிறார்கள் ஜப்பானியர்கள். சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம் போன்ற பேரழிவு நடைபெறப்போகிறது என்பதற்கான முன்னெச்சரிக்கைதான் டூம்ஸ்டே மீன் கரைக்கு வருவது என்று ஜப்பானியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

பார்ப்பதற்கு நீண்ட பாம்பை போல் தோற்றம் உள்ளது டூம்ஸ்டே மீன். நீண்ட பாம்பு போன்று என்றால் 6 அடி 7 அடி அல்ல 32 அடி வரையிலும் நீண்ட உருவம் கொண்டது. பார்ப்பதற்கு ரிப்பன் போலவே பட்டை வடிவத்தில் உள்ளது.
ஆழ்கடலில் இருக்கும் இந்த மீன் உயிர் இல்லாதது போன்று மிதக்கும். திடீரென்று செங்குத்தாக பாயும். இதைப்பார்த்து மீனவர்கள் மிரட்டி அடைவதுண்டு. கடலின் மேற்பரப்பில் இம்மீன் அரிதாகவே காணப்படும்.
ஆழ்கடலில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால்தான் தனக்கு அங்கே வாழ முடியாத சூழல் உண்டானால்தான் இம்மீன் மேலே வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டு தொந்தரவுகள் ஏற்பட்டதால் மட்டுமே இம்மீன் நீருக்கு மேலே வருகிறது என்கிறது ஆராய்ச்சியாளர்கள். அதனால்தான் இதை பேரழிவின் அறிவிப்பு என்கிறார்கள் மீனவர்கள்.

கடந்த 2011ஆம் ஆண்டில் ஜப்பான் கடற்கரையில் 20க்கும் மேற்பட்ட டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கி இருக்கின்றன. அந்த ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக அங்கே மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
இவ்வாண்டில் பிப்ரவரி மாதத்தில் மெக்சிகோவின் பசுபிக் கடற்கரையில் டூம்ஸ்டே மீன் தென்பட்டதால் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்கள் வலையில் இந்த ஓர் ஃபிஷ் சிக்கி இருக்கிறது. இந்த மீனை 7 மீனவர்கள் சேர்ந்து தூக்கி வைத்துக்கொண்டு, ‘’2025ல உலகம் ஜோலி முடிஞ்சிச்சு’’ எச்சரிக்கின்றனர்.
’நீரின்மகன்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மீனை பிடித்த வீடியோ பதிவாகி உள்ளது.