
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரயில்வே தேர்வு வாரியத் தேர்வு ரத்து என்றுகடைசி நேரத்தில் அறிவித்ததால், 1000 , 1500 கிலோமீட்டருக்கு மேல் பயணப்பட்டு தேர்வு மையத்திற்கு சென்றுள்ள தேர்வர்கள் கடும் கொதித்தெழுந்துள்ளனர்.
ரயில் உதவி ஓட்டுநர் (லோகோ பைலட் ) காலி இடங்களுக்கான CBT 2 தேர்வினை இரயில்வே தேர்வு வாரியம் நடத்துகிறது. தமிழ்நாட்டில் CBT 1இல் 6 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளார்கள். இதையடுத்து இவர்களுக்கு இன்று CBT 2 தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இவர்களுக்கான தேர்வு மையங்கள் 1500 கிலோ மீட்டர் தாண்டி ஆந்திரா, தெலுங்கானா, ஹைதராபாத் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் நிதிச்சுமை மட்டுமல்லாது கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகினார்கள் தேர்வர்கள்.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் 1000 கிலோ மீட்டர், 1500 கிலோ மீட்டர் பயணித்து வெளி மாநிலங்களில் தேர்வு எழுத வேண்டிய நிலை இருந்ததால், அதை மாற்ற வேண்டுமெனக் கோரி தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொள்ளப்பட்டன . மதுரை எம்.பி. சு,.வெங்கடேசன் இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு கடிதம் எழுதினார்.
தொடர்ச்சியான அழுத்தங்களை அடுத்து, உடனடியாக 6000 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வு செய்ய முடியவில்லை என பதில் அளித்தது மத்திய இரயில்வே அமைச்சகம்.
இரண்டாவது தேர்வு நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது என்பதால், முடிந்தவரை சொந்த மாநிலங்களிலேயே தேர்வு எழுத வசதி தரப்படும், முடியாத பட்சத்தில் அருகில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது என்றும் விளக்கம் தரப்பட்டது.
இதனால் வேறு வழியின்றி இன்றைய தினம் 1000 மற்றும் 1500 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வெழுத சென்றனர். ஆனால் இன்று தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தேர்வெழுத சென்றவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘’இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைக் கூட முன்னெச்சரிக்கையாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’என்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.

அவர் மேலும் இந்த விவகாரம் குறித்து, ’’வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது’’ என்கிறார்.
ரயில்வே துறையின் இந்த செயலை ஒரு போதும் ஏற்கமுடியாது என்று சொல்லும் சு.வெங்கடேசன், பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும்’’ என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும் , ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ரயில் உதவி ஓட்டுநர் தேர்வு எழுதச்சென்ற தமிழ்நாட்டு இளைஞர்களும் இதே கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.
jtwvqf
tjhivw
z2syjq
o1yh5l
t5i8rg
lercly