
தூக்க மாத்திரைகள் போட்டுப் பார்த்தாலும் தூங்க விடாம படுத்துறார் அன்புமணி. அவரைப் பார்த்தாலே எனக்கு பிபி ஏறுது. அந்த அளவுக்கு மன உளைச்சலைத் தர்றார் என்று இந்த அளவுக்குக் ராமதாஸ் வேதனைப் படுவதைக் கேட்கும்போது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அன்புமணி செயல் தலைவர் என்று தான் அறிவித்ததை ஒரு கட்சியின் தலைவரின் அறிவிப்பு இது என்ற முறையிலும் அன்புமணி ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்ற தகப்பனாகவும் சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை அன்புமணி. இப்படி தனக்கு எந்த ஸ்தானத்தையும் தரவில்லை என்பதால்தான் மகன் என்று கூட பார்க்காமல், அன்புமணியின் எதிர்கால அரசியல் பாதிக்கப்படக்கூடும் என்பதைக் கூட யோசிக்காமல் அவரைப்பற்றின நெகட்டிவ் பக்கங்களை வெளியே எடுத்து காட்டிவிட்டார் ராமதாஸ்.

யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு மன உளைச்சலை அளித்திருக்கிறார் அன்புமணி என்றுதான் ராமதாஸே குறிப்பிடுகிறார்.
செயல்தலைவர் என்று தான் அறிவித்ததை ஏற்று நடந்தால் அன்புமணிக்கு எல்லா அதிகாரமும் தானாக தேடி வரும். 2026 சட்டமன்ற தேர்தல் வரையிலும் நானே தலைவராக இருப்பேன். அதன் பின்னர் எல்லா அதிகாரமும் அன்புமணிக்கு சென்றுவிடும் என்று சொல்லிப்பார்த்தார் ராமதாஸ்.
ஆனால் அன்புமணியோ முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று பிடிவாதக்காரராக உள்ளார். அமைதியாக இரு என்று ராமதாஸ் சொன்னதைக் கேட்காமல் அடுத்தடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியது ராமதாசின் காதுக்கு வர கடுப்பாகிவிட்டார்.

அதனால்தான் இன்று 2026 வரை மட்டுமே தான் தலைவராக இருப்பேன் என்பதை வாபஸ் வாங்கிக்கொண்டார் ராமதாஸ். மூச்சு அடங்கும் வரைக்கும் தானே பாமகவின் தலைவராக இருப்பேன். அதுவரையிலும் அன்புமணியை தலைவராக்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்து விட்டார்.
இதற்கு பிறகாவது அன்புமண வழிக்கு வருவார் என்றுதான் , மூச்சு அடங்கும் வரையிலும் நானே தலைவர் என்று கடைசி அஸ்திரத்தையும் எய்துப்பார்த்தார் ராமதாஸ். இதற்கு அசைந்து கொடுக்கவில்லை அன்புமணி. பதிலுக்கு பனையூர் அலுவலகத்தில் மா.செ. கூட்டத்தை கூட்டி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.