
தந்தையிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல. அதனால் செயல்தலைவராக தொடர்ந்து செயல்பட தயார் என்று அன்புமணி முன்வந்தால் பாமகவில் எந்த பிரச்சனையும் இல்லை என ராமதாஸ் சொல்லி இருந்தார். ஆனால் அன்புமணி அதை ஏற்கவில்லை. தன் பலத்தை நிரூபிக்கவே முயற்சிகளை அதிரடியாக எடுத்திருக்கிறார்.
பாமகவில் தன் பலத்தை நிரூபிக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். இக்கூட்டத்திற்கு 95% நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இன்று நடைபெறும் கூட்டம் குறித்தும், இதில் எடுக்கப்பட இருக்கும் முடிவுகள் குறித்தும் நிர்வாகிகளிடம் நேற்று இரவே தொலைபேசியில் ஆலோசித்திருக்கிறார் அன்புமணி. அப்போது நிர்வாகிகள் பலரும் ராமதாசின் குற்றச்சாட்டுகளை அடுக்க, அதைப்பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் அன்புமணி.

அன்புமணி அழைத்து அழைப்புக்கு இளைய தலைமுறை நிர்வாகிகள் ஓடோடி வந்து நிற்கிறார்கள். ஆனால் மூத்த நிர்வாகிகளோ ராமதாசுக்கு எதிராக எப்படி நிற்பது என்று தர்ம சங்கத்தில் இருக்கிறார்கள். இதனால்தான் பாமக எம்.எல்.ஏ. அருள் தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்து, தந்தையும் மகனும் இணைய வேண்டும். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
பாமக தலைவர் தான் தான் என்று ராமதாஸ் கூறி இருக்கும் நிலையில், இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அன்புமணி வந்தபோது ‘பாமக தலைவர்’ என்று கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.
கட்சியின் தலைவர் தானே என்று அன்புமணி நிரூபிக்க போராடும் நிலையில், கட்சியின் தலைவர் தானே என்று புதிய தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் ராமதாஸ்.

அன்புமணியின் கூட்டத்திற்கு கே.பாலு, திலகபாமா பங்கேற்றிருந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் அவரின் பொருளாளர் பதவியை பறித்து புதிய நிர்வாகியை அறிவித்திருக்கிறார் ராமதாஸ்.
பனையூர் அலுவலக ஆலோசனக் கூட்டத்தில் அன்புமணி பேசிக்கொண்டிருக்க அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் விதமாக பாமக நிர்வாகிகள் பலரையும் நீக்கி புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார் ராமதாஸ். பதிலுக்கு திலகபாமாவே பொருளாளர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தந்தை – மகன் முற்றும் நிலையில் இது குறித்து பேசவே மறுக்கிறார் பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி. அரசியலே வேண்டாம் என்று நினைக்கிற அளவுக்கு தான் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர்.
இந்த நிலையில் பனையூர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, இது கட்சியின் புதிய அடிப்படை உறுப்பினர்களை சேர்க்க ஆலோசிக்கும் கூட்டம்தான் என்றும், ராமதாஸ் அய்யாவின் கொள்கைகளை பரப்ப உழைப்போம். பொதுக்குழுவில் கூடித்தான் என்னை தலைவர் என்று அறிவித்தீர்கள். கட்சியில் என்றும் அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். என்றும் அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.
சாதி வளர்க்க கட்சி, அப்புறம் எதுக்கு கூச்சம்
intha maanga madaiyangalaooda tholla thaanga mudiyala, oramaa poi vilaydungada apprasantigala