
கூட்டணி பேச்சுவார்த்தை நடக்க வேண்டிய நேரத்தில் பாமகவில் தந்தை – மகன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழலாகிவிட்டது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு.
கடந்த 5ஆம் தேதி அன்று அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன் தைலாபுரம் சென்று ராமதாசுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆடிட்டர் குருமூர்த்தி. அதன் பின்னர் வெளியே வந்த இருவரிடமும், உள்ளே என்ன நடந்தது? என்பது குறித்த கேள்விக்கு, ‘’ராமதாஸ் எங்களின் 35 வருட நண்பர். அதனால் நலம் விசாரித்தோம்’’ எனச் சொல்லி சமாளித்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவே வந்தார்கள் என்பதை போட்டு உடைத்துவிட்டார் ராமதாஸ். பாமகவின் இந்த மோதல் போக்கு வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதால் பாமக சார்பில் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், ராமதாஸ் அதை மறுத்திருக்கிறார். இருவரும் தனிப்பட்ட முறையிலேயே வந்து பேசினார்கள் என்று சொல்கிறார் ராமதாஸ்.

7 ஆண்டுகளுக்கு முன்பே பாமகவை கைப்பற்ற நினைத்தார் அன்புமணி. அப்போது அதைக்கேட்டு கண்ணீர் வடித்தேன் என்று சொல்லும் ராமதாஸ், பாடுபட்டு வளர்த்த கட்சியை விட்டு தன்னை வெளியேற்ற நினைக்கிறார் அன்புமணி என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார் ராமதாஸ்.
அன்புமணி, சவுமியா இருவரும் வருந்திக் கேட்டுக்கொண்டதால் அன்புமணியை பாமகவின் தலைவராக்கினார் ராமதாஸ். தலைவர் ஆனதும் கட்சி அதிகாரம் முழுவதும் தனக்கே என்று கொடி தூக்கினார் அன்புமணி. ராமதாசை ஓய்வு பெறச்சொன்னார் அன்புமணி. இது ராமதாசை எரிச்சல் படுத்த, தலைவர் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு அன்புமணியை செயல் தலைவர் ஆக்கினார்.
செயல்தலைவராக செயல்பட விரும்பாத அன்புமணி, தலைவர் என்று கெத்து காட்டினார். ராமதாஸ் நடக்கும் கூட்டங்களுக்கு நிர்வாகிகளை போக விடாமல் செய்தார் அன்புமணி. இது தன்னை மானபங்கம் படுத்தியது என்கிறார் ராமதாஸ். இதனால் அன்புமணி ஆதரவாளர்களின் பொறுப்பை பறித்து வருகிறார் ராமதாஸ். அவரின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக பதிலுக்கு நீக்கப்பட்டவர்களை நியமித்து வருகிறார் அன்புமணி.

இந்த போட்டா போட்டி அரசியலை முடிவுக்கு கொண்டு வர நினைத்துதான் பேச்சுவார்த்தைக்கு சென்றார் குருமூர்த்தி. அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மீண்டும் தலைவர் ஆக வேண்டும் என்றால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதனால்தான் பொதுக்குழுவை கூட்டி தன்னை மீண்டும் தலைவராக்க முயன்று வருகிறார் அன்புமணி.
தனக்கெதிராக மேலும் மேலும் அன்புமணி இப்படிச் செய்வது சரியல்ல. அவர் அமைதியாக இருந்தால், அப்பா சொன்னதைக்கேட்டு செயல்தலைவராகவே செயல்படத் தயார் என்று சொல்லி அமைதியாக இருந்தாலும் எல்லா அதிகாரங்களும் அவரைத் தேடி வரும்.
2026 சட்டமன்ற தேர்தலைப்பொறுத்தவரையிலும் எனக்கான சாய்ஸ். இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி? எத்தனை சீட்? என்பது பற்றி எல்லாம் நான் தான் பேசி முடிவெடுப்பேன். யார் யார் வேட்பாளர்? என்பதையும் நானேதான் முடிவெடுப்பேன். இந்த தேர்தலை பொறுத்தவரையிலும் நானே தலைவர். தேர்தல் முடிவுக்கு பின்னர் பாமகவின் அதிகாரம் மொத்தமும் அன்புமணிக்கே சென்றுவிடும் என்று சொல்லி இருக்கிறார் ராமதாஸ்.

இதைக்கேட்டு அன்புமணியிடம் செல்போனில் பேசி இருக்கிறார்கள் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும். அந்த பொறுமை அன்புமணியிடம் இல்லை. ராமதாசின் இந்த முடிவுக்கு கட்டுப்படமாட்டேன் என்று சொல்ல, அன்புமணி யார் பேச்சையும் கேட்க மாட்டான். நாம முயலுக்கு நாலு காலு என்று சொன்னா அவன் மூணு காலுன்னு சொல்லுவான். இது சரிப்பட்டு வராது, அவனா? நானா? பார்த்துடுறேன் என்று சத்தம் போட்டிருக்கிறார் ராமதாஸ்.
குருமூர்த்தி பேச்சுவார்த்தையில் நடந்ததைத்தான் இன்று செய்தியாளர்களிடம் மனம் திறந்திருக்கிறார் ராமதாஸ். அன்று, அவனா? நானா? என்று கர்ஜித்ததைத்தான் இன்று, நீயா? நானா? பார்த்துவிடுகிறேன் என்கிறார் ராமதாஸ்.
அப்படி என்றால் குருமூர்த்தியின் கட்டப்பஞ்சாயத்து தோல்வியில் முடிந்துவிட்டது என்று நினைத்தால், அதுதான் இல்லை. பேச்சுவார்த்தை டிராவில் முடிந்திருக்கிறது; தோல்வியடையவில்லை என்று சொல்கிறார் ராமதாஸ்.
Esenler su kaçak tespiti Apartman bodrumundaki su kaçağı için birçok firma geldi ama bulamadı. Bu firma özel kameralarla sorunu hemen tespit etti. Murat Ö. https://communiti.pcen.org/read-blog/28282