இந்தியர்கள் ஆபத்தான முறையில சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேறி வருவது, சமீபத்திய ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து வருகிறது இந்த சூழலில், பிரான்ஸில் இந்தியர்கள் பயணித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது
ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை பிரான்ஸ் தடுத்து வைத்திருந்த நிலையில், இன்று விடுவிக்க உள்ளது
ஆனால் விமானம் இந்தியா திரும்புமா அல்லது வேறு எந்த நாட்டை நோக்கி பயணிக்கும் என்பது குறித்து தெரியவில்லை
துபாயில் இருந்து நிக்கராகுவா நாட்டுக்கு 303 பயணிகளை ஏற்றிச் சென்ற ரோமானிய நாட்டைச் சேர்ந்த விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸில் தரையிறங்கியது
ஆள் கடத்தல் என சந்தேகித்த பிரான்ஸ் அதிகாரிகள், விமானத்தை 3 நாட்களாக தடுத்து விசாரணை செய்ததில், விமானத்தில் பெரும்பாலும் இந்தியர்களும் குறிப்பாக தமிழ், இந்தி பேசும் பயணிகள் இருந்த செய்தி தெரியவந்தது
விசாரணை நடைமுறையில் ஒழுங்கற்ற நிலை இருப்பதாகக் கூறி, திடீரென விசாரணையை நிறுத்திய பிரான்ஸ் நீதிமன்றம் விமானத்தை விடுவிக்க உத்தரவிட்டது
விமானம் இந்தியா திரும்பும் என்று பிரான்ஸ் பார் அசோசியேஷன் தலைவர் கூறிய நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அதிகாரிகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை
விமானத்தில் உள்ள இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்யும் தொழிலாளர்களாக இருக்கலாம் என்றும் அவர்கள் நிக்கராகுவாவுக்குச் சென்று அமெரிக்கா அல்லது கனடாவுக்கு சட்டவிரோதமாக நுழைய திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று கூறியுள்ள ரோமானிய விமான நிறுவனத்தின் தரப்பு, பயணிகள் அனைவரும் முறையாக நிக்கராகுவா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளது